15th May 2025 15:47:06 Hours
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு, விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு, படையணி தலைமையகம் மற்றும் அனைத்து விஜயபாகு காலாட் படையலகுகளுடன் இணைந்து, மல்பிட்டிய சந்தியில் 2025 மே 12 அன்று கடலை மற்றும் ஐஸ்கிரீம் தானம் வழகியது. இந்த நிகழ்வு விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.