15th May 2025 15:50:06 Hours
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துலாஷி மீபாகல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கவச வாகன படையணி நிலையத்தில் 2025 மே 12 அன்று வெசாக் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, பக்தி கீதம் மற்றும் சீனிசம்பல் பாண் மற்றும் தேநீர் தானம் வழங்கப்பட்டது.
உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.எஸ் தேவபிரிய யூஎஸ்பீ என்டிசீ, இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.