15th May 2025 16:02:19 Hours
பனகொடை பொறியியல் சேவைகள் படையணி நலன்புரி கடை வளாகத்தில், பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 மே 12 ம் திகதி பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் ரொட்டி மற்றும் தேநீர் தானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கேஎஎன் ரசிக்க, குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நாள் முழுவதும் 3,600 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.