14th May 2025 16:08:54 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவு அனுராதபுரம், ஹொரொவ்பொத்தானை சுஹதகம பாடசாலையில் 2025 மே 08 ஆம் திகதி நலன்புரி நிகழ்ச்சி திட்டத்தை நடாத்தியது. இந்த நிகழ்ச்சி திட்டத்தில் பாடசாலை கட்டிடங்களை புனரமைத்தல், மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் விநியோகம், பெற்றோருக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொதிகள், அதனைத் தொடர்ந்து மதிய உணவு வழங்கல் ஆகியவை அடங்கும்.
tifyஇந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புனரமைக்கப்பட்ட விகாரை அறையை பார்வையிட்ட தலைவி, புனரமைக்கப்பட்ட பூங்கா, கழிப்பறை வசதிகள், நூலகம் மற்றும் வகுப்பறைகளையும் பார்வையிட்டார். தேநீர் விருந்துபசாரம் மற்றும் மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன. மேலும் நிகழ்ச்சியின் போது பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
புனரமைப்பு பணிக்கு உதவிய 211 வது காலாட் பிரிகேட், 5 வது (தொ) கஜபா படையணி மற்றும் 2 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினரின் முயற்சிகளை தலைவி பாராட்டினார். வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.