09th May 2025 15:39:39 Hours
பனாகொடை 'விருகெகுலு' பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2025 மே 08 ஆம் திகதி இலங்கை சமிக்ஞை படையணி மைதானத்தில் ஆரம்பமாகியது. இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியும், பாலர் பாடசாலையின் பொறுப்பாளருமான திருமதி உதாரி அனுபமா கமகே அவர்கள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுடன் வருகை தந்த பிரதம விருந்தினரை பிள்ளைகள் அன்புடன் வரவேற்றனர்.
பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றுதல் மற்றும் இசைக்குழு நிகழ்ச்சியுடன் நிகழ்வு ஆரம்பமாகின. 195 பிள்ளைகள் மற்றும் 16 ஆசிரியர்கள் பல்வேறு போட்டிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் பரிசு வழங்கும் நிகழ்வுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்தன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.