08th May 2025 16:06:42 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ராகம, ரணவிரு செவன மற்றும் அத்திட்டிய, மிஹிந்து செத் மெதுர ஆகிய இடங்களில் தற்போது சிகிச்சை பெற்று வரும் 41 போர் வீரர்களின் 62 பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள், பாடசாலை பைகள், எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை காலணி வவுச்சர்கள் விநியோகிக்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 30 அன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூஎஎஸ்ஆர் விஜயதாச டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.