03rd May 2025 13:15:28 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஏப்ரல் 26 ம் திகதி அன்று முல்லேரியா தேசிய மனநல நிறுவனத்தில் புத்தாண்டு நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாரம்பரிய புத்தாண்டு இனிப்புகள் மற்றும் தேநீர் விருந்து இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கலிப்சோ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி மற்றும் நோயாளர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கல் பேன்றவை இடம்பெற்றதுடன், மேலும் நோயாளர்களின் நலன் கருதி இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் சுகாதார அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தளபாடங்களுடன் பரிசுப் பொதிகளையும் வழங்கினர். இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.