22nd April 2025 09:13:44 Hours
இலங்கை பீரங்கி படையணி, இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை 2025 ஏப்ரல் 05 ஆம் திகதி பனாகொடை மேஜர் ஜெனரல் கிராஷியன் சில்வா மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தலையணை சண்டை, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், பனிஸ் சாப்பிடுதல், பலூன் உடைத்தல் போட்டிகள் மற்றும் பல சம்பிரதாய விளையாட்டுகள் இடம்பெற்றன.
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவு ஒரு வர்த்தக கண்காட்சியையும் ஏற்பாடு செய்திருந்ததுடன், இந்த கண்காட்சி பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை வழங்கியது. இந்த கொண்டாட்ட நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.