Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

19th April 2025 09:35:02 Hours

இராணுவ சேவை வனிதையரால் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தேநீர் விருந்து மற்றும் வீட்டுத் திட்டங்களுக்கான நிதியுதவி

இராணுவ சேவை வனிதையர் பிரிவு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை தேநீர் விருந்துபசாரத்துடன் 2025 ஏப்ரல் 17ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் உள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் கொண்டாடியது.

இந்த நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சம்பிரதாய மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அன்றைய நிகழ்ச்சித்திட்டங்களின் ஒரு பகுதியாக, சேவை வனிதையர் பிரிவு வீட்டுத் திட்டங்களுக்கு உதவும் வகையில் நிதி உதவிகளை வழங்கியது. புதிய வீடுகளின் கட்டுமானத்தைத் தொடங்க மூன்று வீரர்களுக்கு தலா ரூ.400,000.00 வழங்கப்பட்டதுடன், அதே நேரத்தில் ஐந்து வீரர்களுக்கு பகுதியளவு கட்டப்பட்ட வீடுகளை கட்டிமுடிக்க தலா ரூ.300,000.00 வழங்கப்பட்டது. மேலும், ஒரு சிவில் ஊழியருக்கு பகுதியளவு கட்டப்பட்ட வீட்டை நிறைவு செய்வதற்கு ஆதரவாக ரூ.200,000.00 வழங்கப்பட்டது.

மேலும், சென்ற மாதாந்த கூட்டத்தின் போது, புதிய கட்டுமானங்கள் மற்றும் பகுதியளவு கட்டப்பட்ட வீடுகளை நிறைவு செய்யும் முயற்சிகளை ஆதரிப்பதற்காக முதல் கட்டத்தில் மேலும் ஐந்து வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டத்தில், ஒரு புதிய வீட்டைக் கட்டுவதற்காக ஒரு சிப்பாய்க்கு ரூ.200,000.00 வழங்கப்பட்டது. மேலும் பகுதியளவு கட்டப்பட்ட வீடுகளைத் தொடர்வதற்காக மூன்று வீரர்களுக்கு தலா ரூ.150,000.00 வழங்கப்பட்டது.

சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.