18th April 2025 18:57:34 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மையத்தில் 2025 ஏப்ரல் 05 ஆம் திகதி நன்கொடை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் பணியாற்றும் நான்கு வீரர்களுக்கு ரூ. 250,000.00 நிதியுதவி வழங்கப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க இரண்டு வீரர்கள் தலா ரூ. 100,000.00 நிதியுதவியை பெற்றுக் கொண்டனர். ஏனைய இருவரும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட தங்கள் பிள்ளைகளுக்கு உதவ தலா ரூ. 25,000.00 நிதியுதவியை பெற்றுக் கொண்டனர்.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.