17th March 2025 15:46:37 Hours
இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் 2025 மார்ச் 13 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, நாரஹேன்பிய இராணுவ மருத்துவமனையைச் சேர்ந்த மேஜர் விஷ்மிகா டி சில்வா அவர்கள் "திருப்திகரமான திருமண வாழ்க்கை" என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். மேலும், ஜப்பானில் வசிக்கும் ஒரு இலங்கையரின் அனுசரணையின் மூலம், இராணுவ வீரர்களின் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்தம் ரூ. 3,000.00 பெறுமதியான உதவித்தொகைகளைப் பெற்றனர். மேலும், 13 சாரிகள் குலுக்கல் முறை மூலம் சிப்பாய்களின் துணைவியர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.