15th March 2025 21:57:14 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவு அலுவலக வளாகத்தில் 2025 மார்ச் 14 அன்று நன்கொடை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
நலன்புரி நிகழ்வின் போது, ஐந்து போர் வீரர்களின் வாழ்க்கைத் துணைவியர்களுக்கு ஐந்து தையல் இயந்திரங்களும் 7வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சிப்பாய்க்கும், மற்றொன்று வீரமரணம் அடைந்த போர் வீரரின் விதவை மனைவிக்கும் வழங்கப்பட்டது. மேலும், போர் வீரர்களின் பிள்ளைகளின் கல்வியை ஆதரிப்பதற்காக அத்தியாவசிய புத்தகங்கள் மற்றும் பாடசாலை பொருட்கள் உட்பட பல பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
மேலும், 50 சிவில் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வியை ஆதரிப்பதற்காக அத்தியாவசிய புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன, இதில் ரூ. 3000.00 பெறுமதியான பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர்களும் அடங்கும்.