10th March 2025 14:26:36 Hours
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி வலிகல்ல ஸ்ரீ துசிதா தர்ம பாடசாலையில் 112 ஏழைக் சிறுவர்களுக்கு நன்கொடை வழங்கும் திட்டம் 2025 மார்ச் 02 அன்று நடத்தப்பட்டது.
அவர்களுக்கு புத்தகங்கள், பாடசாலை பைகள், மதிய உணவுப் பொதிகள், தண்ணீர் போத்தல்கள், பாதணிகள், பேனா, பென்சில்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதியும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏஎம்கேஜீபீஎஸ்கே அபேசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.