10th March 2025 14:31:09 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை சமிக்ஞை படையணியில் பணியாற்றும் சிப்பாய் ஒருவரின் பிள்ளைகளுக்கு 2025 மார்ச் 07 ம் திகதி படையணி தலைமையகத்தில் பால் பொதிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
பயனாளியின் ஒரு வருடமும் மூன்று மாதங்களும் வயதுடைய இரட்டை பெண் குழந்தைகள் தங்கள் தாயை இழந்துள்ள நிலையில் அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிப்பாயின் நிதிச் சுமைக்கு உதவும் நிமித்தமும் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் இந்த நன்கொடை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டம் மாதாந்தம் வழங்கப்படவுள்ளமை என்பது குறிப்பிடதக்கதாகும்.