Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

05th March 2025 14:42:49 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரால் கலப்பின மிளகாய்ச்செடி விநியோகம்

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அப்சரா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், பனாகொடை 1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவம் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட கலப்பின மிளகாய் செடிகள் 2025 பெப்ரவரி 26 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினரான திருமதி சத்துரிகா ஜயசுந்தர அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, செடி விநியோகத் திட்டத்தின் முதல் கட்டமாக கலப்பின மிளகாய் செடிகள் மற்றும் உரங்களை உத்தியோகப்பூர்வமாக வழங்கினார்.

விவசாய விரிவுரையாளர் திரு. ஏ.எச். ரணவீர அவர்களால் நிகழ்த்தப்பட்ட விரிவுரையுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன, இது பங்கேற்பாளர்களுக்கு பெறுமதிப்புமிக்கதாக காணப்பட்டது.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.