19th February 2025 10:50:07 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினால் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி இரேஷா பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பெண் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான மன நலம் மற்றும் ஊக்கம் குறித்த ஒரு கருத்தரங்கு 2025 பெப்ரவரி 14, அன்று படையணி தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை உளவியலாளர் வைத்தியர் பாக்யா தேசப்பிரிய நடத்தியதுடன் இதில் 75 பெண் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், ஒரு பொழுதுபோக்கு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து 12 படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் பாடசாலை உதவி பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிவில் ஊழியரின் தாய்க்கு உதவுவதற்காக ஒரு சக்கர நாற்காலியும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
நிகழ்வின் நிறைவாக, பெண் சிப்பாய்களுக்கு பரிசுப் பொதிகள் குலுக்கல் மூலம் வழங்கப்பட்டன இது அன்றைய நடவடிக்கைகளுக்கு மகிழ்ச்சியான நிறைவை சேர்த்தது.