13th February 2025 17:59:13 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் முன்னாள் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுக்கு 2025 பெப்ரவரி 08 ஆம் திகதி இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி அதிகாரிகள் உணவகத்தில் பிரியாவிடை வழங்கியது.
இந்த நிகழ்வில் அவரது அர்ப்பணிப்புடைய சேவை மற்றும் நிறுவனத்திற்கான பங்களிப்புகளை எடுத்துக்காட்டும் சிறப்பு விளக்கக்காட்சி இடம்பெற்றது. பாராட்டு தெரிவிக்கும் விதமாக, நிகழ்வின் முடிவில் திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்கள் திருமதி ஜானகி லியனகே அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்வில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.