11th February 2025 13:54:59 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவு, இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 77 வது சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்ற படையினருக்கு புத்துணர்ச்சிக்கான பானங்களை வழங்கும் திட்டத்தை மேற்கொண்டது. நெஸ்லே லங்கா லிமிடெட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த திட்டம் 2025 ஜனவரி 30 முதல் பெப்ரவரி 4 வரை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.