21st January 2025 14:09:24 Hours
களுத்துறை - வடக்கு ஜாவத்தை முதியோர் இல்லத்தின் நிர்வாக சபையின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எச்.ஜீ சுவர்ணலதா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், முதியோர் இல்லத்தின் கழிப்பறை வளாகம் 2025 ஜனவரி 10ம் திகதி புதுப்பிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.