Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

26th July 2024 09:28:26 Hours

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரினால் நன்கொடை வழங்கல்

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2024 ஜூலை 21 அன்று கடவத்மடுவ ஸ்ரீ போதி ருக்கராம விகாரையில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.

போதிருக்கராம தர்ம பாடசாலையில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 83 சிறார்களுக்கு தேசிய உடைக்கான துணி மற்றும் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், தர்ம மண்டபத்திற்கு வர்ணம் பூசுதலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விகாரைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் அனைத்து பிள்ளைகளுக்கும் பால் போத்தல்களுடன் மதிய உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு திரு.லலித் அமரநாத் மற்றும் திருமதி.என்.இலேபெரும ஆகியோர் அனுசரணை வழங்கினர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.