16th July 2024 13:57:59 Hours
இராணுவ சேவை வனிதையரின் 40 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு முதலாம் படை படையினரால் 2024 ஜூலை 12 ஆம் திகதி மர நடுகை திட்டத்தை முன்னெடுத்தனர். இந்த திட்டமானது இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் கருத்திற்கமைய, முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி திட்டத்தில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் முதலாம் படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.