09th July 2024 19:20:53 Hours
வன்னி மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவம் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் 200 உலர் உணவுப் பொதிகள் இராணுவத் தலைமையக இராணுவ சேவை வனிதையர் அலுவலகத்தில் 2024 ஜூலை 08 அன்று வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அந்த நிவாரணப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.