07th July 2024 08:03:30 Hours
இராணுவ தளபதியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் எச்எல்வீஎம் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் மறைந்த லான்ஸ் கோப்ரல் ஜிடி குமாரசிங்கவின் குடும்பத்திற்காக 30 ஜூன் 2024 அன்று கொங்கொல்ல, பிபிலையில் ஒரு புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே அவர்களினால் நடைபெற்ற புதிய வீடு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்களால் பயனாளிக்கு தேவையான மின்சாதனங்களும் கையளிக்கப்பட்டன.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.