Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

25th June 2024 23:20:29 Hours

சந்துன்புர 3 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியில் புதிய நூலக வசதி

இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 3 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்எச்எச் டி சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2024 ஜூன் 16 ஆம் திகதி சந்துன்புர 3 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி படையினருக்காக புதிய நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி அவர்கள் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அவர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அனைத்து நிலையினருக்கும் உரையாற்றியதுடன் தனது உரையில், வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நிகழ்வின் சிறப்பம்சமாக புதிதாக திறந்துவைக்கப்பட்ட நூலகத்தை வளப்படுத்த பெறுமதி வாய்ந்த புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.