Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd June 2024 16:39:22 Hours

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினால் கண்டியில் பாயாச தானம்

லங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி கங்கா ஹேரத் அவர்களின் பங்கேற்புடன் பொசன் தினத்தை முன்னிட்டு 2024 ஜூன் 21 ஆம் திகதி கண்டி புனித தலதா மாளிகையில் பாயாச தானத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

மல்வத்து பீட பிரதி பொறுப்பதிகாரி வண. நியங்கொட விஜிதசிறி தேரர் அவர்களுடன் பூவேலிக்கடை போத்திருக்கராமயாவைச் சேர்ந்த வண. சீலரதன தேரர் அவர்கள் இணைந்து இந்த தான நிகழ்வை பொது மக்களுக்காக திறந்து வைத்தனர்.

நாடளாவிய ரீதியில் இருந்து புனித வழிபாட்டிற்கு வரும் பக்தர்களின் பசியை தீர்க்கும் நோக்கில் இந்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு, அனைத்து சமிக்ஞை படையணிகள் மற்றும் பிற நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த தானத்திற்கு தேவையான பொருட்களை வழங்கியதுடன், சமிக்ஞை படையணி பயிற்சிப் பாடசாலையினால் தான நிகழ்வு வெற்றிகரமாக நடாத்துவதற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை சமிக்ஞைப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.