Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th May 2024 07:48:17 Hours

வன்னி,மேற்கு பாதுகாப்பு படை தலைமையகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இராணுவ சேவை வனிதையரினால் 200 உலர் உணவு பொதிகள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் வன்னி மற்றும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணிபுரியும் இராணுவ மற்றும் சிவில் பணியாளர்களுக்கு 200 உலர் உணவுப் பொதிகளை 2024 மே 10 அன்று இராணுவத் தலைமையகத்தில் வழங்கியது.

இந் நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அந்த நிவாரண பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.