24th April 2024 17:14:45 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவம் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு தியத்தலாவ கோல்ப் கிளப்பில் 22 ஏப்ரல் 2024 அன்று 200 உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ , இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.