Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

10th April 2024 12:48:46 Hours

இராணுவம் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு சேவை வனிதையரால் 400 உலர் உணவு பொதிகள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் இராணுவத் தலைமையகத்தில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ மற்றும் சிவில் பணியாளர்களுக்கு 400 உலர் உணவுப் பொதிகள் 2024 ஏப்ரல் 08 ம் திகதி இராணுவ சேவை வனிதையர் அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டD. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் நிமித்தம் இராணுவத்தினர் எதிர்கொள்ளும் பொருளாதார சுமையை குறைக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அந்த நிவாரணப் பொதிகளை பயனாளுகளுக்கு வழங்கினார்.

இந் நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.