Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

12th February 2024 14:15:27 Hours

இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரின் வருடாந்த பொதுக் கூட்டம்

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் 27 ஜனவரி 2024 அன்று தொம்பேகொட இலங்கை இராணுவ போர் கருவி படையணி பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியும் வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி ஏஏடிஓ ஆகியோர் கலந்து கொண்டனர்.

வருகை தந்த இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்களை இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் வரவேற்றனர். தலைவி மங்கல விளக்கு ஏற்றி வைத்த்துடன், சேவை வனிதையர் பிரிவின் கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. வீரமரணமடைந்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பின்னர், 10 சிவில் ஊழியர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், தேவையுடைய ஒரு குடும்பத்திற்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோரால் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினால் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.