Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

07th February 2024 15:30:17 Hours

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையரால் அதன் படையினருக்கு உதவி

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு இராணுவ புலனாய்வு படையணியின் தேவையுடைய 65 இராணுவ வீரர்களுக்கு 2024 ஜனவரி 27 அன்று கரந்தெனிய படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது ரூ. 7500/= மதிப்புள்ள பணப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியின் வழிகாட்டுதலின்படி இராணுவ புலனாய்வு படையணி படையினரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பிள்ளைகளுக்கு தலா ரூ.5000/= நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த மாதாந்த நன்கொடை ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படும்.

இராணுவத்தின் பதவி நிலை பிரதானியும் இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎச்கேஎஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி திலுபா பீரிஸ், இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.