Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

07th February 2024 16:53:18 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுக்கூட்டம் இராணுவ தலைமையகத்தில்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டம் இராணுவத் தலைமையக வளாகத்தில் படையணி சேவை வனிதையர் பிரிவுகளின் தலைவிகள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் 2024 பெப்ரவரி 06 ம் திகதி நடைபெற்றது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கீததுடன் ஆரம்பமான கூட்டத்தில், உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த வருடத்தின் அடைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த தலைவி, அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, முந்தைய கூட்டத்தின் அறிக்கையினை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிறைவேற்று செயலாளர் கெப்டன் எம் ஏ டப்ளியூ நிமாஷா வாசித்தார், மேலும் கணக்காய்வு அறிக்கையை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர் மேஜர் பீஜிபீசி குமாரி சமர்ப்பித்தார்

பின்னர், கஜபா படையணியில் கடமையாற்றும் மூன்று இராணுவத்தினருக்கு பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே வழங்கினார். இதே நிகழ்வையொட்டி, கஜபா படையணியில் பணியாற்றும் சிவில் ஊழியர் ஒருவருக்கு அவரது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், கஜபா படையணியில் பணியாற்றும் ஐந்து வீரர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் விநியோகிக்கப்பட்டன.

மேலும், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட நன்கொடையாளர்கள் ஊடாக கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாதாந்த கூட்டத்தின் நிறைவில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டதை தொடர்ந்து இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அனைத்து உறுப்பினர்களுடன் சுமுகமான முறையில் உரையாடினார்.