Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

12th January 2024 17:32:48 Hours

2024 ஆம் ஆண்டிக்கான இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுக்கூட்டம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டம் இராணுவத் தலைமையக வளாகத்தில் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவிகள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் புதன்கிழமை (ஜனவரி 10) நடைபெற்றது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே தலைமையில், இராணுவ சேவை வனிதையர் பிரிவு பாடலுடன் ஆரம்பமான கூட்டத்தில் உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின், கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவம் அடிப்படையில் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

பிரதி தலைவி - திருமதி திலுபாபீரீஸ்

செயலாளர் - திருமதி நந்தனி சமரக்கோன்

பிரதிச் செயலாளர் - திருமதி ஷம்மி ஜயவர்தன

பொது ஒருங்கிணைப்பு அதிகாரி - திருமதி ஷெஹானி பெர்னாண்டோ

பிரதி பொது ஒருங்கிணைப்பு அதிகாரி - திருமதி துஷாரி யட்டிவவல அலுவிஹாரே

குழு திட்ட மேற்பார்வை அதிகாரி - திருமதி. நெலுகா நாணயக்கார

கடந்த வருடத்தின் சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த தலைவி, அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, முந்தைய கூட்டத்தின் அறிக்கையினை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிறைவேற்று செயலாளர் கேப்டன் எம் ஏ டப்ளியூ நிமாஷா வாசித்தார், மேலும் கணக்காய்வு அறிக்கையை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர் மேஜர் பீஜிபீசி குமாரி சமர்ப்பித்தார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் விவகாரங்களுக்கு ஆதரவைக் காட்ட அமைப்பு முறையே ரூ. 600,000, ரூ. 500,000 மற்றும் ரூ. 450,000, வீடுகள் கட்டுமானத்தில் இருக்கும் மூன்று இராணுவ வீரர்களுக்கு நன்கொடை அளிக்கப்பட்டது. மனிதாபிமான நடவடிக்கையின் போது பயங்கரவாதத் தாக்குதலால் செவித்திறன் குறைபாட்டை அனுபவிக்கும் இராணுவ வீரருக்கு செவிப்புலன் உதவி வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளி இராணுவ வீரரின் மாமனாருக்கு சக்கர நாற்காலி வாங்க ரூ.42,000 வழங்கப்பட்டது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உத்பலாஹெட்டியாராச்சி அவர்களும் இதே நிகழ்வின் போது இராணுவ சேவை வனிதையர் பிரிவு நிதிக்கு நிதி நன்கொடையை வழங்கினார்.