Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th January 2024 19:35:45 Hours

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையரால் போர் வீரர்களின் பிள்ளைகளுக்கு உதவி

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 52 பாடசாலை மாணவர்களுக்கு தலா 16,000.00 ரூபா பெறுமதியான புலமைபரிசில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் வழங்கப்பட்டது.

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க, பொதுபணி பணிப்பாளர் நாயகமும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வின் போது மாலி ஐக்கிய நாடுகளின் பல பரிமானம் ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணியின் போது கடுமையாக காயமடைந்த போர் வீரன் சாஜன் ஈஎஜீ ஏக்கநாயக்க அவர்களுக்கு 02 மில்லியன் பெறுமதியான மின்சார சக்கர நாற்காலியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.