Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

18th December 2023 23:58:34 Hours

மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரினால் 74 வது ஆண்டு நிறைவு தினத்தில் போர் வீரர்களுக்கு அஞ்சலி

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி 74 வது ஆண்டு நிறைவை ஒட்டி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் மற்றும் உறுப்பினர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) கன்னொருவ இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பயிற்சி பாடசாலையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இவ்விழாவின் போது, உயிர் நீத்த போர்வீரர்களின் உறவினர்களை தலைமையக வளாகத்திற்கு அழைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உணவு பொதிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியும் வழங்கல் கட்டளைகள் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சிஎல்எஸ்சி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.