Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

25th November 2023 10:58:47 Hours

தியத்தலாவ ‘விருகெகுலு’ சீறார்களின் வருடாந்த கலை விழா

தியத்தலாவ 'விருகெகுலு' பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) தியத்தலாவ டார்ச் சினிமா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் கலந்து கொண்டார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி ஹிமாஷா ஏக்கநாயக்க நியங்கொட அவர்கள் திருமதி ஜானகி லியனகே அவர்களை அன்புடன் வரவேற்றார். அதனை தொடர்ந்து பிரதம அதிதியை சிறுமி ஒருவர் தாம்பூலம் வழங்கி வரவேற்றதுடன் கலந்து கொண்ட அதிதிகள் மங்கல விளக்கை ஏற்றி பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்க்கும் வகையில் பிள்ளைகள் நடனங்கள், வேடிக்கையான செயற்பாடுகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்வுகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை அரங்கேற்றி பார்வையாளர்களை மகிழ்வூட்டினர்.

பின்னர், தியத்தலாவை விருகெகுலு பாலர் பாடசாலையின் அபிவிருத்திக்காக தியத்தலாவ மக்கள் வங்கியின் அதிகாரிகள் 50,000/= ரூபாவை இதே சந்தர்ப்பத்தில் வழங்கி வைத்தனர்.

அமர்வின் இறுதியில் திருமதி ஹிமாலி ஏக்கநாயக்க நியங்கொட அவர்கள் திருமதி ஜானகி லியனகே மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு விசேட நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி, மத்திய முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் சிறார்களின் பெற்றோர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.