Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

09th November 2023 20:59:43 Hours

அனுராதபுரம் ‘விருகெகுலு’ சிறுவர்களின் வருடாந்த கலைவிழா

அநுராதபுரம் 'விருகெகுலு' பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்களின் வருடாந்த கலைவிழா திங்கட்கிழமை (நவம்பர் 6) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அனுராதபுர 'விருகெகுலு' பாலர் பாடசாலை நிர்வாகத்திற்கு பொறுப்பான இராணுவ சேவை வனிதையர் பிரிவின் திருமதி நிலுகா நாணயக்கார கலந்து கொண்டார்.

பிரதம அதிதி மங்கழ விளக்கை ஏற்றிவைத்ததுடன் பாலர் பாடசாலையின் சிறுமி ஒருவர் பிரதம அதிதிக்கு தாம்பூலம் வழங்கி வரவேற்றார். நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்க்கும் வகையில் பிள்ளைகள் நடனங்கள், வேடிக்கையான செயற்பாடுகள் மற்றும் நகைச்சுவை நிகழ்வுகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையாளர்கள் மத்தியில் அரங்கேற்றினர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ, 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஐ.ஏ.என்.பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், பாலர் பாடசாலை ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.