Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

18th October 2023 21:10:58 Hours

இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையரினால் பிள்ளைகளுக்கு உதவி

இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையரினால் தேவையிலுள்ள பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பல உதவி நிகழ்வுகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பந்துணி மாக்ரெட் ரணசிங் ரணவக்க அவர்களின் வழிகாட்டுதலின்படி 15 ஓகஸ்ட் 2023 அன்று வத்தேகமவில் உள்ள 'சுரசா' பிள்ளைகள் மேம்பாட்டு மையத்தில் 28 பிள்ளைகளுக்கு உலர் உணவுகள், பரிசுப் பொதிகள் மற்றும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ போர்கருவி படையணி படைத்தளபதி, நிலைய தளபதி 4 வது இலங்கை இராணுவ போர்கருவி படையணி கட்டளை அதிகாரி ஆகியோர் இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டனர்.

போர் கருவி படையணியின் 32 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 21 செப்டெம்பர் 2023 அன்று கல்பத்தாவில் உள்ள ‘சுகிதா சிறுவர் இல்லத்தின்’ பிள்ளைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கினர்.

இந்த நிகழ்வானது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படக்கூடிய பல்வேறு வயதுக் குழுக்களைக் கொண்ட 80 பிள்ளைகளுக்கு இது நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பெண் அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.