Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th April 2023 16:24:58 Hours

மார்ச் மாத தானம் வழங்கல்

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 25 மார்ச் 2023 அன்று அம்பலாங்கொட, பொல்வத்தை வருசவிதான முதியோர் இல்லத்தில் மாதாந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி குமுதுனி முத்தலிப் அவர்களின் பங்கேற்புடன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அன்று மாலையில் நடந்த ஒரு தர்ம பிரசங்கம் முதியோர்களின் மனதை ஆன்மீக ரீதியில் மகிழ்வித்தது.

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சல்லே, சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.