17th February 2022 09:22:18 Hours
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரிகளின் உணவகத்தில் ஜனவரி 28 அன்று இடம் பெற்றது.
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த அமர்வின் போது, இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவில் ஏற்கனவே உள்ள வெற்றிடங்களை நிரப்ப புதிய அலுவலகப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். 2022 ஆம் ஆண்டுக்கான நலத்திட்டங்களை நடத்துவது குறித்தும் இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டு திட்டமிடப்பட்டது.
இராணுவ வளங்கல் தளபதியும், இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் மற்றும், இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் சஞ்சய பத்திரன ஆகியோரும் இந்நிகழ்வின் அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவுகளும் ஆண்டு பொதுக் கூட்டம் தாக்கல் செய்யப்பட்டது.