18th February 2022 08:57:46 Hours
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் அண்மையில் போதி பூஜை, பாடசாலை அணிகலன்கள் மற்றும் சீருடை நன்கொடை வழங்கல் உட்பட சில சிறப்பு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் மற்றும் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சாலியபுர ஸ்ரீ தலதாராமயவில் நடத்தப்பட்ட போதி பூஜை, நாடு முழுவதும் உள்ள இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி உறுப்பினர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் 334 மாணவர்களுக்கு பாடசாலை அணிகலன்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (5) ஜயபுரத்தில் உள்ள 5 வது இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் நிலைய தளபதி அவர்களால், அதன் நலன்புரிப் பங்கின் ஒரு பகுதியாக, சுமார் 280,000/= பெறுமதியான, மின்சார சக்கர நாற்காலி ஒரு சிப்பாயின் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைக்கு வழங்கப்பட்டது.