21st March 2022 19:16:39 Hours
இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவு, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரிகள், சிப்பாய்களின் கர்ப்பிணி மனைவிகளுக்கான விசேட நன்கொடை நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை (11) கொழும்பு 02 இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தில் ஏற்பாடு செய்தது.
இந்த விசேட நன்கொடை நிகழ்ச்சியின் போது, இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன், இராணுவ வளங்கல் தளபதியும், இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் ஆகியோரால் உலர் உணவுகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
சுகாதார காரணங்களைக் கருத்தில் கொண்டு அந்த ஊக்கத்தொகைகளைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் குழு அழைக்கப்பட்டது.