25th April 2022 19:19:59 Hours
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவினால் 2022 மார்ச் 26 அன்று உடவலவ இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பணிமனையில் சேவையாற்றும் பணியாளர்களுக்கு இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களின் அனுசரணையில் நலன்புரி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உடவளவ இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிமனையில் சேவையாற்றும் சிப்பாய்களின் 26 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும், அதே சந்தர்ப்பத்தில் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்கு ரூபாய் 200,000/= மற்றும் மற்றொரு சார்ஜென் ஒருவருக்கு 350,000/= ரூபாவை பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை முழுமைபடுத்த பணிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும், ஓய்வுபெற்று தனது குடும்பத்துடன் வசித்து வரும் மற்றைய சிப்பாய்க்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக திருமதி நந்தனி சமரக்கோன் அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வுகளின் இராணுவத் வளங்கல் தளபதியும், இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் மற்றும் பல இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.