05th July 2022 15:16:16 Hours
இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி வேலை தளத்தில் பணியாற்றி மரணமடைந்த மற்றும் காயமடைந்த உறுப்பினர்களுக்கு ஆசீர்வாதங்களை வேண்டி, சிறப்பு போதி பூஜையை அண்மையில் ஏற்பாடு செய்தனர்.
அக்குரஸ்ஸ - அமலகொட கங்காராமய பிரதமகுருவான வண.கோனதெனியே சுமன்ரத்தன தேரர் சமய வழிபாடுகளை மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 25 சிவில் ஊழியர்களுக்கு இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நானதனி சமரகோன் அவர்களின் அனுசரணையுடன் 25 சிறப்பு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இதேபோன்று, 4 மாத இரட்டைக் குழந்தைகளைக் கொண்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் குடும்பத்திற்கும், அதே சந்தர்ப்பத்தில் ஆறு மாதங்களுக்குப் போதுமான பால் மாவும் வழங்கப்பட்டது.
இராணுவ வளங்கல் கட்டளைத் தளபதியும், இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், சில சிரேஷ்ட அதிகாரிகள், சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.