10th August 2022 14:29:37 Hours
இராணுவ மின்சாரம் மற்றும் பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் குடும்பங்களின் சிறுவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நோக்கத்துடன் 'தல்செவன' விடுமுறை விடுதியில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் உதவி பொருட்களை 2022 ஜூலை 24 விநியோகிக்கப்பட்டன.
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களால் 27 இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி குடும்பங்களுக்கு சுமார் 300,000/- மதிப்பிலான பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரக்கோன், மற்றும் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.