09th September 2022 14:57:34 Hours
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினர் மற்றும் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் சேவை செய்யும் சிவில் ஊழியர்களுக்கான நலன்புரி திட்டங்களைத் முன்னெடுக்கும் வகையில் மேலும் ஒரு நிவாரணத் திட்டத்தை 3 வது இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தில் சனிக்கிழமை (27) மேற்கொண்டனர்.
இந்த ஏற்பாட்டின் போது மின்னேரிய இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்கள் 3 வது இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் பணிபுரியும் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி குடும்பங்களின் சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கான 50 ஜோடி பாடசாலை காலணிகளை கொள்வனவு செய்வதற்கு 2 இலட்சம் ரூபா பெறுமதியான நிதி உதவிகளை வழங்கினார்.
பெறுநர்கள் அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் படையணி தலைமையகத்தின் பரிந்துரைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த விநியோக விழாவில் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரக்கோன், மின்சாரம் மற்றும் பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரக்கோன், மற்றும் இராணுவ வழங்கல் கட்டளை தளபதி மற்றும் மின்சாரம் மற்றும் பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.