Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

13th March 2023 22:03:59 Hours

இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையரால் போர் வீரர்களுக்கு நினைவஞ்சலி

இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் 24 பெப்ரவரி 2023 அன்று இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி வளாகத்தில் 'போதி பூஜை மற்றும் தர்ம போதனை ஏற்பாடு செய்யப்பட்டது.

தாய்நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் வேளையில் உச்சக்கட்ட தியாகம் செய்த போர்வீரர்களையும், காணாமல் போனவர்களையும் நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களின் வழிகாட்டுதலின்படி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் இணைந்து இந்த புண்ணிய திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அமலகொட அக்குரஸ்ஸ கங்காராம புராண விகாரையின் பிரதம பீடாதிபதி வண. கோனதெனிய சுமன்ரத்ன தேரரால் 'போதி பூஜை நடத்தப்பட்டதுடன் 'தர்ம போதனை நுகேகொட கங்கொடவில சுனேத்ராதேவி தேரவாடா சர்வதேச பௌத்த நிலையத்தின் தாஹாஸ்ஹான சர்வதேச பௌத்த நிலையத்தின் பிரதம பீடாதிபதியினால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியும் வழங்கல் கட்டளைகள் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்