Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

05th September 2023 23:31:53 Hours

சிங்க படையணி உறுப்பினர்களுக்கு சேவை வனிதையரால் பலநலத்திட்டங்கள்

இலங்கை சிங்க படையணி குடும்பங்கள், காயமடைந்த போர்வீரர்கள், இராணுவக் குடும்பங்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்களுக்காக இலங்கை சிங்க படையணி தலைமையகம் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து நலன்புரி திட்டத்தின் தொடர்ச்சியாக சனிக்கிழமை (செப்டம்பர் 2) அன்று பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் (100 மாணவர்கள்), பத்து ஊன்றுகோல் மற்றும் மாற்றுத்திறனாளி போர்வீரருக்கு ஒரு சக்கர நாற்காலி, மகள்மார் மற்றும் மனைவியர்களுக்கு சுயதொழில் நிமித்தம் நான்கு தையல் இயந்திரங்கள் மற்றும் இருபத்தொரு பொதுமக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் என்பன வழங்கப்பட்டன.

சிங்க படையணி படைத்தளபதியும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் மற்றும் சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜெயவர்தன அவர்களின் முயற்சிகளைத் தொடர்ந்து ரூ. 2.5 மில்லியன் பெறுமதியான இந் நலத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜெயவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் சிங்க படையணி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த வழங்கல் நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இலங்கை சிங்க படையணியின் வேண்டுகோளுக்கு இணங்க உதவியாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் குழு இந்த நன்கொடை நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியது. இலங்கை சிங்க படையணி நிலைய தளபதி பிரிகேடியர் சிஎஸ் திப்பொட்டுகே, சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.