Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

21st December 2022 23:26:28 Hours

மறைந்த சிப்பாயின் துணைவிக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரால் புதிய வீடு

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2022 நவம்பர் 14 இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் ஹெட்டிபொலவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த சிப்பாய் ஒருவரின் குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்து கையளித்தனர்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிரோமலா கொடித்துவக்கு வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டத்திற்கான நிதியுதவி இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் வழங்கப்பட்டது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி கேணல் சுஜித் குலசேகர ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி இப் புதிய வீட்டிற்கான திறப்பை பயனாளிக்கு வழங்கியதுடன் பதாகையை திரை நீக்கம் செய்தார்.