08th January 2022 11:10:39 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு நத்தார் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (24) பனாகொட இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் கரோல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வில் இலங்கை சமிக்ஞைப் படையணியின் பாடகர் குழுவும் அதன் இசைக்குழுவும் இசை நிகழ்ச்சியை நடாத்தியதுடன், இந்த இசை நிகழ்ச்சி இலங்கை சமிக்ஞைப் படையணியின் குடும்பத்தினர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஜீவனி பீரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சியின் போது, கிறிஸ்மஸ் தாத்தா அந்த இடத்தில் இருந்த பிள்ளைகளுக்கு பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்கினார்.