08th January 2022 11:15:28 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் அனுராதபுரத்தில் தொடர்ச்சியான சமய நிகழ்வுகளுடன் 2022 புத்தாண்டு ஆசீர்வாதங்களுக்காக "அதிஷ்டான பூஜை" ஒன்றை நடத்தினர்.
இந்த சமய நிகழ்வுகள் 31 டிசம்பர் 2021 மற்றும் 01 ஜனவரி 2022 ஆகிய நாட்களில் ருவான்வெலி மகா சேய மற்றும் புனித ஜயஸ்ரீ மஹா போதி வளாகத்தில் இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் மற்றும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஜீவனி பீரிஸ் ஆகியோரின் அனுசரணையில் அனுராதபுரம் 4 வது இலங்கை சமிக்ஞைப் படையணியில் நடத்தப்பட்டது.
மேளக்காரர்கள் மற்றும் நடனக் கலைஞர்களால் செய்யப்பட்ட வண்ணமயமான ஊர்வலத்தின் பின்னர் ருவான்வெலி மகா சேயாவில் பிக்குகளின் பங்கேற்புடன் ‘போதி பூஜை’ மற்றும் ‘பிரித்’ பாராயணங்கள் இடம்பெற்றன.
இதன் போது ஊர்வலம் "கிரிபிடு பூஜை" மற்றும் புனித ஜய ஸ்ரீ மஹா போதியாவிற்குச் சென்றது, அங்கு பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக மலர்கள் விநியோகிக்கப்பட்டன.
கொவிட்-19 நோய் தொற்றிற்கு இணங்க இடம்பெற்ற இந் நிகழ்வில், இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் மற்றும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஜீவனி பீரிஸ் மற்றும் இலங்கை சமிக்ஞைப் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்களும் பங்கேற்றன